

சென்னையில் ஆரபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
அதன்படி, ஆவரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11ஆயிரத்து 350-க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.