தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வருகிற நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி இந்த விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற வருகிற நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
TN govt all party meeting on nov 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வா் அழைப்புவிடுக்க வேண்டும்: பாஜக

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: மு. வீரபாண்டியன்







