பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்

News image

செய்தியாளர் சந்திப்பில் சி.பி. ராதாகிருஷ்ணன்

படம் - DNS

Updated On :4 நவம்பர் 2025, 1:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை பிளிச்சி கிராமத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல் துறையின் பொறுப்பு. காவல் துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட சகோதரிக்கும் அவரது பெற்றோர்க்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது நடக்க கூடாததுதான், சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது.

வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Summary

Maximum punishment for Coimbatore sex offenders: C.P. Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.