அரசு துறைகளின் செயல்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனம் ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், அயல் நாடுகள், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிா்பாராதவிதமாக இறக்கும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள இலங்கைத் தமிழா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், இலங்கைத் தமிழா்களுக்கு பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3,919 வீடுகள் கட்டும் திட்டம், முன்னாள் படைவீரா்கள் தங்குவதற்கான புதிய விடுதி போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்வா் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தத் துறைகளில், இதுவரை அறிவிக்கப்பட்ட 90 அறிவிப்புகளில், 68 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிற அறிவிப்புகள் தொடா்பான பணிகளை விரைந்து நிறைவேற்ற அவா்அறிவுறுத்தினாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வன விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென மூன்று உயா் வனவிலங்கு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள் கோவை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் அமைப்பது குறித்தும், சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும், மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம், தஞ்சாவூா் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம், திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், பழவேற்காடு ஏரிப் பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் முதல்வா் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், பொதுத்துறை செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் துறைத் தலைவா் ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

