அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

5,000 பேருக்கு அதிகமான அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு! - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழிவுகள்

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்டவை..

News image

அனைத்துக் கட்சி கூட்டம்

Updated On :6 நவம்பர் 2025, 1:37 pm IST

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி, அனைத்து கட்சிகளுக்கும் குறைந்தது 5 நாள்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

சாலை வலம், பொதுக்கூட்டங்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

சாலை வலம் நடத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.

கூட்டத்திற்கு டெபாசிட் தொகையாக அதிகபட்சம் ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் ஏற்பட்டால் ஈடு செய்யும் வகையில் இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5,000 பேருக்கு மேல் வரும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

5000 -10,000 பேர் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

10,000 முதல் 20,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 3 லட்சம்

20,000 - 50,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 5 லட்சம்

50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி, ஒரே இடத்தை ஒன்றுக்கும் அதிகமானோர் கேட்டால் யார் முதலில் அனுமதி கோருகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை போன்ற விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த விதிகளுக்கு கட்சிகள் தங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

All party meeting for political meetings Guidelines

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.