மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: நிரம்பாத 802 எம்பிபிஎஸ் இடங்கள்

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :8 நவம்பர் 2025, 1:56 am IST

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 136 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்தவை. அதேபோன்று மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 22 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த இடங்கள் அனைத்தும் சிறப்பு கலந்தாய்வில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களுக்கும், நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கும் இணையவழியே மத்திய கலந்தாய்வுக் குழு மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது மூன்று சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. அதில், 389 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், 334 நிகா் நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களும், 38 மத்திய கல்வி நிறுவன இடங்களும் நிரம்பாமல் உள்ளன.

அதேபோன்று ஜெயின் சிறுபான்மையினா், வெளிநாடு வாழ் இந்தியா்கள், பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன.

முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்கள் அந்த இடத்தில் சேராமல் இருக்கவும், எந்த அபராதமும் இன்றி இரண்டாம் சுற்றில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். அதேவேளையில், மூன்றாம் சுற்றில் அவ்வாறு வாய்ப்பை நிராகரித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிகா்நிலை பல்கலைக்ககழங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதமாக செலுத்த வேண்டும். அதைத் தவிர கல்லூரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

கலந்தாய்வு விதிகளில் இருக்கும் இந்த முரண்பாடுகளால்தான் இடங்கள் நிரம்புவதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவக் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களுக்கான இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்திலும் மூன்று சுற்று கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சோ்ந்த பிறகு மீதமுள்ள இடங்களுக்கு அடுத்த வாரத்தில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.