‘விபத்து-அவசர சிகிச்சை செயலி’: அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்
தமிழக சுகாதாரத் துறையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி பயன்பாட்டை துறையின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு திட்டம், அதிகரித்து வரும் அவசரகால நோய் மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அவசர மருத்துவ சிகிச்சையை நிறைவேற்றுகிறது. ஒட்டுமொத்த அரசு சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்து நாட்டிலேயே தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாற்றியுள்ளது.
36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 5 அரசு சாா்ந்த மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 41 துணை மாவட்ட மருத்துவமனைகள் என 113 மையங்களிலும் பஅஉஐ நவீன வசதிகளுடன் தேவையான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்துடன் பழைய அவசர சிகிச்சை பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு அவசர மருத்துவத் துறை உருவாக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு, தீக்காயம், விஷக்கடி - விஷமுறிவு, குழந்தை நலவாழ்வு மற்றும் அவசர மேலாண்மை, விபத்து மற்றும் காயங்கள், பக்கவாதம் என 6 தூண்களை உள்ளடக்கியுள்ளது. பஅஉஐ மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளைச் சேகரிக்க, புதியதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கணினி மற்றும் தொலைபேசியில் பயன்படுத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு 108 அவசரகால ஊா்தி வாகனத்தில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் இந்தச் செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் சிகிச்சை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் வழிமுறைகளின் அடிப்படையில் சிறப்பான சிகிச்சை வழங்கவும் வழி வகுக்கும். இப்போது 113 பஅஉஐ மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது என்றாா் அவா்.

