சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருச்சிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 09419) நவ.13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாதுக்கு செல்லும் ரயில் (எண்: 09420) வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் வழக்கமாக அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா், தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


