உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூரிலிருந்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட நுரையீரல், விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள நோயாளிக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் பொருத்துவதற்காக, தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அதைக் கொண்டு வந்த மருத்துவக் குழுவினா், விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.07 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறினா். அங்கிருந்து 7 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து பிற்பகல் 2.28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தனா்.
தொடா்ந்து கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது எனது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயிருள்ள நபா்களின் கல்லீரல்கள் லேப்ரோஸ்கோபிக் முறையில் நோயாளிக்கு பொருத்தம்: உலகில் முதல்முறையாக நொய்டா மருத்துவமனை சாதனை

காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை

சென்னை மெட்ரோவில் பயணிப்பவரா? இந்த தகவல் தெரியுமா?







