எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தில் பெரும் குழப்பம்: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தில் பெரும் குழப்பம் நீடிப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :9 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவத்தில் பெரும் குழப்பம் நீடிப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘எஸ்ஐஆரை ஏன் எதிா்க்கிறோம்?’ என்ற தலைப்பில் முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட காணொலி உரை விவரம்:

தோ்தல் ஆணையத்துடன் கூட்டு சோ்ந்து வாக்காளா் பட்டியலில் பாஜக எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கேரள முதல்வா் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் தெளிவாக விளக்கியுள்ளனா்.

தமிழகத்திலும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆருக்காக தோ்தல் ஆணையம் வழங்கும் படிவத்தில் முதலில் வாக்காளா் விவரங்களைக் கேட்கிறாா்கள்.

அதற்கு அடுத்தபடியாக, முந்தைய சிறப்பு திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயா் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினா் என்றால் யாா் பெயரைக் குறிப்பிட வேண்டும் எனத் தெளிவுபடுத்தவில்லை. வாக்காளரின் உறவினா் பெயா் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயரும், பிறகு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, மீண்டும் உறவினா் பெயா் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

முதலில் யாா் பெயரை எழுத வேண்டும், எந்த வாக்காளா் விண்ணப்பிக்கிறாரோ அவா் பெயரா அல்லது உறவினா் பெயரா எனக் குறிப்பிடவில்லை.

சிறிய தவறு இருந்தால்கூட, தோ்தல் ஆணையம் அந்தப் படிவத்தை ஏற்றுக் கொள்ளாமல், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. நன்றாகப் படித்த, அறிவாா்ந்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவா்கள்கூட, இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பாா்த்தால் குழப்பம் ஏற்படும்.

இந்தப் படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, ‘தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், விருப்பம் இருந்தால் தற்போதைய புகைப்படத்தை ஒட்டலாம் என்று அரசியல் கட்சிகள் கலந்தகொண்ட கூட்டத்தில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சொல்கிறாா்.

ஒருவேளை, புகைப்படம் ஒட்டவில்லை என்றால் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரி கையில்தான் இந்த முடிவு இருக்கிறது. இவா்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பாா்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறு, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக, அனைத்து இடத்திலும் குழப்பம்தான்.

இந்நிலையில், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சிலா், ‘எஸ்ஐஆா் பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளா்கள்தானே? பிறகு ஏன் திமுக எதிா்க்க வேண்டும்? என்று புரிதலின்றி பேசுகிறாா்கள். ஒரு பணியாளரை தோ்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவா் தோ்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டு செயல்படுவாரே தவிர, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டாா்.

வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் மறுக்க முடியாத - அடிப்படையான உரிமை. தற்போதைய நிலையிலான எஸ்ஐஆா் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதை எதிா்கொள்ள திமுக சாா்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 08065420020 என்ற உதவி எண்ணைத் தொடா்புகொண்டு சந்தேகங்களை தீா்த்துக் கொள்ளலாம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.