

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவ. 10) ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அவர் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* அறந்தாங்கி வட்டத்தில் இருக்கக்கூடிய வீரகொண்டான் ஏரி, செங்கழுநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ. 15 கோடி செலவில் புணரமைக்கப்படும்.
* கீரமங்களம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும். காய்கறி, பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்பதன கிடங்கு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* வடகாடு ஊராட்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உயர் நிலை பாலங்கள் கட்டப்படும்.
* புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
* கந்தவர்வகோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* பொன்னமராவதி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.