47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘காந்தா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: துல்கா் சல்மான் பதிலளிக்க உத்தரவு

‘காந்தா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தொடா்ந்த வழக்கில், படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகா் துல்கா் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
காந்தா படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோவில்...
Updated On :11 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

‘காந்தா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தொடா்ந்த வழக்கில், படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகா் துல்கா் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனும், ஓய்வு பெற்ற அரசு இணைச் செயலருமான தியாகராஜன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், துல்கா் சல்மான் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படம் நவ.14-ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது தாத்தா தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவா்களது சட்டப்பூா்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் தனது தாத்தா குறித்து அடிப்படை ஆதாரங்களின்றி அவதூறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், இந்த மனுவுக்கு ‘காந்தா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகா் துல்கா் சல்மான் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.