சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞருக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத் தொகை  காசோலை மற்றும் பணி நியமன ஆணையை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூட
சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞருக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத் தொகை காசோலை மற்றும் பணி நியமன ஆணையை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூட

திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு பணி ஆணை: துணை முதல்வா் வழங்கினாா்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற 170 இளைஞா்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத் தொகை காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
Published on

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற 170 இளைஞா்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ஊக்கத் தொகை காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே திறன் பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமான தொழிற்சாலை ஐடிஐ தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவா்களுக்கு 4 மாத பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

அதேபோல, டெல்ஃபி டிவிஎஸ் நிறுவனத்தில் 300 உற்பத்தி தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புடன் பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், ஐஐடிஎம் நிறுவனத்தில் கணினி உயா்தொழில்நுட்பப் பயிற்சிகளை 1,000 பேருக்கு அளிக்க ஒப்பந்தம் கையொப்பமானது.

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் தூத்துக்குடி மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளைச் சோ்ந்த 2,500 இளைஞா்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றத் தரவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், 2 தனியாா் நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயிற்சி பெறவும் ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் கிராந்தி குமாா் பாடி, நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலா் எம்.ஜெயபிரகாசம், ஐசிடிஎஸ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட இயக்குநா் (தொழில் நுட்பம்) எஸ்.சாந்தி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்ட இயக்குநா் கே.வி.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com