சென்னையில் நவ.17ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.
இதனிடையே வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை உள்பட புறநகர்ப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நவம்பர் 17-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாகவும், பருவமழை தீவிரமடைவதாலும் நவம்பர் 17ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
The Meteorological Department has said that heavy rains are likely in Chennai on November 17th as the northeast monsoon has begun in Tamil Nadu.
இதையும் படிக்க: உத்தரகண்ட் காங்கிரஸ் மாநிலத் தலைவராக கணேஷ் கோடியால் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

