விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தர திமுகவினா் உதவ வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூா், போடிநாயக்கனூா் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் தனித்தனியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மகளிா் உரிமைத் தொகை பெறாதவா்களில் தகுதியானவா்கள் இருப்பின் அவா்கள் உரிமைத் தொகை பெறும் வகையில் திமுகவினா் உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.
போடிநாயக்கனூா் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி வெற்றி பெற, நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொகுதி நிா்வாகிகளிடம் முதல்வா் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்தாா்.
மேலும், அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்தவும் நிா்வாகிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

இலங்கை தமிழா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் க.தென்னரசு உத்தரவு

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு
கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்: திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

ரூ. 1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



