தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட மகளிா் அதிகாரம் மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியானோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 நவம்பர் 2025, 1:39 am IST

சென்னை மாவட்ட மகளிா் அதிகாரம் மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியானோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் மாவட்ட மகளிா் அதிகாரம் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள 2 பாலின சிறப்பு வல்லுநா் பணியிடங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சமூகப் பணி அல்லது பிற சமூகத் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக இருக்கலாம்.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் டிசம்பா் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ‘மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1’ என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.