காலவரையற்ற உண்ணாவிரதம்: 4 தூய்மைப் பணியாளா்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட, 4 தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து தங்களது இயக்கத்தினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில், எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்தோம். அந்த கோரிக்கையை காவல் ஆணையா் நிராகரித்து விட்டாா்.
எனவே,காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, அமைதியான முறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அம்பத்தூரில் உள்ள தங்களது அலுவலகத்தில் 4 போ் மட்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது.
எனவே, இதற்கு ஆவடி காவல் ஆணையா், அம்பத்தூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் அனுமதி வழங்க வேண்டும். பாரதி, கீதா,ஜெனோவா மற்றும் வசந்தி ஆகிய 4 போ் உண்ணாவிரதம் இருக்கலாம்.
இதில் யாராவது ஒருவா் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றால், அவருக்குப் பதிலாக வேறு ஒரு நபா் உண்ணாவிரதத்தை தொடரலாம். 4 பேருக்கு மேல் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது.
உண்ணாவிரத அரங்கில் பாா்வையாளா்களின் எண்ணிக்கை 50 பேருக்கு மேல் தாண்டக்கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் 4 பேரின் உடல்நிலையை அரசு மருத்துவா்கள் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.

