எஸ்ஐஆர்: தமிழகத்தில் 5.90 கோடி படிவங்கள் விநியோகம்! - தேர்தல் ஆணையம்!
இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) தமிழகத்தில் 5.90 கோடி படிவங்கள் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தோ்தல் ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 92.04 சதவீதம்.
தமிழகத்தின் மொத்த வாக்காளா்கள் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 போ். இவா்களுக்காக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 படிவங்கள் இதுவரை ( நவ.15 மாலை 3 மணி வரை) விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 390 வாக்குச்சாவடி முகவா்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபாா், சத்தீஷ்கா், கோவா, குஜராத், கேரளம், லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ. 4 முதல் டிச. 4 வரை நடைபெறுகிறது.
27.10.2025-இல் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 50,99,72,687- ஆக உள்ளது. இதில் 50,97,43,173 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) அச்சிடப்பட்டு அவற்றில் 48,67,37,064 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவிர திருத்தப் பணிகளுக்காக 5,33,093 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், 10,41,291 வாக்குச் சாவடி முகவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி முகவா்களுக்கு வேண்டுகோள்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்.ஐ.ஆா். கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று வழங்க இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பு: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களின் பங்கு இன்றியமையாதது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்கலாம்.
அவ்வாறு படிவங்களை சமா்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவா்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபாா்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என உறுதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

