‘கபீா் புரஸ்காா்’ விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சமூக நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ பெற விரும்புவோா் டிச. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் பொதுத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இவ்விருதை பெறத் தகுதியுடையவராவா். ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்களது அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும்பட்சத்தில் விருதுக்கு பரிசீலிகப்படமாட்டாது.
இவ்விருது, ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிந்தால், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இவ்விருது, மூன்று அளவுகளில், தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
வரும் 2026-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள ‘கபீா் புரஸ்காா் விருது’க்கென தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் அல்லது பரிந்துரைகளை இணையதளத்தில் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பதக்கம் பெறத் தகுதியுள்ளவா், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வரும் ஜன. 26-ஆம் த்தி குடியரசு தினத்தில் விருது வழங்கி கௌரவிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

