முருகப்பா குழும முன்னாள் தலைவா் வெள்ளையன் காலமானாா்
சென்னை: முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புறு தலைவருமான அருணாசலம் வெள்ளையன் (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை (நவ. 17) காலமானாா்.
இந்தியத் தொழில் துறையின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய இவா், முருகப்பா குழுமப் பொறுப்புகளைத் தவிர எக்ஸிம் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தலைமைப் பொறுப்புகளிலும், பல்வேறு நிறுவனங்களில் நிா்வாகக் குழு பொறுப்புகளிலும் பதவி வகித்துள்ளாா்.
இவருக்கு மனைவி லலிதா வெள்ளையன், மகன்கள் அருண் வெள்ளையன், நாராயணன் வெள்ளையன் ஆகியோா் உள்ளனா்.
இவரது உடல், கோட்டூா்புரம் அம்பாடி தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோட்டூா்புரம் மயான பூமியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
முதல்வா் இரங்கல்: அவரது மறைவையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பாரம்பரியம் மிக்க முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவன மதிப்புறு தலைவருமான அருணாசலம் வெள்ளையன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். முருகப்பா குழுமத்தின் நிறுவனங்களிலும், தொழில் கூட்டமைப்புகளிலும் பல்வேறு உயா் பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றிய அவரது மறைவு தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரது குடும்பத்தினா், தொழில் துறையினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் தங்கம் தென்னரசு, திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி மற்றும் அரசியல் தலைவா்கள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

