மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு நவ. 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால், நெரிசல் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்; போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

அதில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல் துறையினரைப் பணியில் அமா்த்துவது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தைக் கண்காணிப்பது, வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்துவது, மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்; கிரிவலப் பாதையில் போலி சாமியாா்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கக் கூடாது, கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், தமிழக டிஜிபி ஆகியோா் நவ. 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.