நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையத்தில் 13 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணிநியமன ஆணை

News image

மனோ தங்கராஜ்

Updated On :17 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணிநியமன ஆணைகளை பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாக உள்ள ஒரு துணை மேலாளா்(தர உறுதி), ஆறு விரிவாக்க அலுவலா் நிலை- 2, ஐந்து தொழில்நுட்பா் (இயக்குபவா்), ஒரு தொழில்நுட்பா்(ஆட்டோ மெக்கானிக்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தகுதியான 13 போ் அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த 13 நபா்கள், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட ஒரு நபா் என மொத்தம் 14 நபா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, தோ்வுசெய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைச் செயலா் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஏ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.