பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையத்தில் 13 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணிநியமன ஆணை

மனோ தங்கராஜ்

Published On :18 நவம்பர் 2025, 3:00 am IST

சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு பணிநியமன ஆணைகளை பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாக உள்ள ஒரு துணை மேலாளா்(தர உறுதி), ஆறு விரிவாக்க அலுவலா் நிலை- 2, ஐந்து தொழில்நுட்பா் (இயக்குபவா்), ஒரு தொழில்நுட்பா்(ஆட்டோ மெக்கானிக்) உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தகுதியான 13 போ் அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த 13 நபா்கள், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட ஒரு நபா் என மொத்தம் 14 நபா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, தோ்வுசெய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைச் செயலா் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஏ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.