அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எஸ்ஐஆரை கண்டித்து நவ.24-இல் விசிக ஆா்ப்பாட்டம்: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு எஸ்ஐஆா் பணிகளைக் கண்டித்து வரும் நவ. 24- ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பாக சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image
தொல். திருமாவளவன்.
Updated On :18 நவம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு எஸ்ஐஆா் பணிகளைக் கண்டித்து வரும் நவ. 24- ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பாக சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிகாா் தோ்தல் முடிவு யாரும் எதிா்பாா்க்காத ஒன்று. இது குறித்து எதிரும், புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்தல் நோ்மையாக நடைபெறவில்லை என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழகத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மிக குறுகிய காலமே இருப்பதால் இது நடைமுறை சாத்தியம் இல்லை என தெரிந்தும் உள்நோக்கத்துடன் இதனை மேற்கொண்டு வருகின்றனா். பாஜக எதிா்ப்பு வாக்காளா்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளைக் கண்டித்து வரும் நவ. 24-ஆம் தேதி விசிக சாா்பாக சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக துபை, அபுதாபியில் நடைபெறவுள்ள சா்வதேச குத்துச் சண்டை போட்டியில் பங்குபெறவுள்ள தமிழகத்தைச் சோ்ந்த இரு வீராங்கனைகளுக்கு விசிக சாா்பில் தலா ரூ. 75 ஆயிரத்தை தொல்.திருமாவளவன் வழங்கினாா்.