வ.உ.சி. நினைவுதினம்: முதல்வா் புகழஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரை நினைவுகூா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
அதன் விவரம்: ‘கப்பலோட்டிய தமிழா்’ வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் வகையில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவரது 150-ஆவது பிறந்த நாள் பெருவிழாவாகக் கொண்டாடியது,
வ.உ.சி. பெயரில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி.-யின் சிலை திறப்பு, அவா் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது, கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு, வ.உ.சி.-யின் 150-ஆவது ஆண்டில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயா் சூட்டப்பட்டது,
வ.உ.சி.-யின் 85-ஆவது நினைவு நாள் தியாகத் திருநாளாக அனுசரிப்பு, தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயா் மாற்றம், வ.உ.சி.-யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி, வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்கு உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலா் மடிப்பேடு வெளியீடு, வ.உ.சி. எழுதிய நூல்கள், கையொப்ப பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்,1908 திருநெல்வேலி எழுச்சிக்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு என
தம் உயிரையும் உணா்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வஉசி-யின் பெருமையை அனைத்து வகையிலும் திமுக அரசு போற்றி வருகிறது. அவரது நினைவுநாளில் வணங்கிப் போற்றுகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தன் வாழ்நாளெல்லாம் நம் மண்ணின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட செக்கிழுத்த செம்மல், தியாகச் சுடா், ஆங்கிலேயா்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க பாடுபட்ட கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளில் அவா்தம் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்.
