வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டு, வாக்காளர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணிக்காக ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பில் கலெக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைவிட கூடுதலாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த நவ. 4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வருகிற டிச. 4 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தற்போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு (6 கோடிக்கும் மேலான) வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய் துறை சங்கம் புறக்கணிப்பதாகத் தெரிவித்தது.
இந்த நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு இன்று (நவ.19) அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து இரு மடங்காக ரூ.12000 ஆக உயர்த்தப்படுகிறது.
அதோடு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், வாக்குச் சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
Summary
Election Commission doubles the remuneration for Booth Level Officers; Enhances remuneration for BLO Supervisors
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடிக்கும் நிலை தவெகவுக்கு இல்லை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆனால்...! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்ஐஆா் பணிகள்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



