புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி பற்றி..
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அடுத்த இரண்டு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்-கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நவ.22ல் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நவம்பர் 24 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நவ. 21, 22ல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Summary

The India Meteorological Department has said that the new low pressure area will strengthen into a depression in the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com