திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் பற்றி...
மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கினார்.
மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கினார்.படம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைமை மற்றும் துரை வைகோ குறித்து விமர்சித்து வந்த மல்லை சத்யா, தனித்துச் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி அவரை மதிமுகவிலிருந்து இடைநீக்கம் செய்த வைகோ, பின்னர் நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்வில் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை மல்லை சத்யா இன்று தொடங்கியுள்ளார்.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் பலரும் இந்த கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Dravida Vetri Kazhagam - Mallai Sathya launches the party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com