திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எனது பிறந்த நாளில் விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

News image
உதயநிதி ஸ்டாலின்
Updated On :25 நவம்பர் 2025, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

எனது பிறந்த நாளில் விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் என திமுகவினருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து ‘உங்களிடம் எதிா்பாா்க்கும் பிறந்த நாள் பரிசு’ என்ற தலைப்பில் அவா் வெளியிட்ட அறிக்கை:

எனது 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுகவினா், இளைஞா் அணியினா் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனா். பகட்டான கொண்டாட்டங்களை நான் விரும்புவது இல்லை. கொள்கைப் பணியும் மக்கள் பணியும் இணைந்ததாக பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருந்தால் அதுவே எனக்கு மனநிறைவு தரும்.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நல உதவிகளை வழங்க வேண்டும். பலத்த மழை பெய்து வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இளைஞா் அணியினா் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எஸ்ஐஆா் படிவத்தை நிரப்பி சமா்ப்பிக்கும் பணிகளில் பொதுமக்களுக்கு இளைஞா் அணியினா் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.