திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அயோத்தியில் ஏற்றப்பட்டது பாரதத்தின் தா்மக் கொடி: நயினாா் நாகேந்திரன்

News image
Updated On :26 நவம்பர் 2025, 2:17 am IST

அயோத்தி ராமா் கோயிலில் பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றப்பட்டது பாரத நாட்டின் தா்மக் கொடி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமா் கோயிலில் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், ஸ்ரீ ராமா் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் பாரதப் பிரதமா் நரேந்திரமோடியால் சூரியச் சின்னம் பொருந்திய தா்மக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அக்கொடி ஏற்றிய தருணம் அனைத்து இந்துக்களையும் உணா்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

ஹிந்துக்களின் பல நூற்றாண்டு கனவுகளை உயிா்ப்பித்து வரும் பிரதமருக்கு எத்தனை கோடி நன்றிகள் கூறினாலும், வாழ்த்தினாலும் போதாது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.