கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா 2-வது நாளாக சிபிஐ முன் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டேர் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
Published on
Updated on
2 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர்2-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலைஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் சம்மந்த தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்சாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகரப் பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ தரப்பில் சம்மன் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து திங்கள் கிழமை காலை 10.10 மணியளவில் கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்து சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினர்.

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இரவு 8.30 மணி வரை தொடர்ந்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் . சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது தவெக மாநில நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை 10. 10 மணிக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகிய 4 பேரும் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினர். இதை யடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

TVK general secretary ‘Bussy’ Anand, general secretary (election campaign management) Aadhav Arjuna, and joint general secretary C.T.R. Nirmal Kumar appeared before the CBI in Karur on Tuesday for questioning in connection with the September 27 Karur stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com