நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

நாகூா் கந்தூரி விழா: சென்னை, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிறப்பு ரயில்கள் பற்றி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறித்து...

News image

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Updated On :25 நவம்பர் 2025, 10:34 pm IST

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூா், விழுப்புரத்தில் இருந்து நவ.30-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து நவ.30-ஆம் தேதி காலை 9.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06137) மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06138) வேளாங்கண்ணியில் இருந்து டிச.1-ஆம் தேதி காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (நவ.26) காலை 8 மணி முதல் தொடங்கும்.

முன்பதிவில்லா சிறப்பு ரயில்: விழுப்புரத்தில் இருந்து நவ.30-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (எண்: 06135) பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் அதேநாளில் நாகப்பட்டினத்தில் பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (எண்: 06136) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்தச் சிறப்பு மெமு ரயிலில் இருக்கை வசதிகொண்ட 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.