

டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை(நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று(நவ. 27) புயலாக வலுப்பெற்றுள்ளது.
தற்போது வட தமிழகம் நோக்கி 4 கி.மீ. வேகத்தில் 'டிட்வா' புயல் நகர்ந்து வருகிறது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு இடையே நவ. 30 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.