கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள்: இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்!

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்...

News image
ரயில்- கோப்புப்படம்
Updated On :29 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் மற்றும் வந்து சேரும் உழவன், அனந்தபுரி, சேது உள்பட 4 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 4-ஆம் தேதி வரை தஞ்சாவூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் உழவன் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அனந்தபுரி அதிவிரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் சேது விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமாா்க்கமாக இந்த விரைவு ரயில்கள் டிச. 1 முதல் 5-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.