பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள்: இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்!

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்...

News image

ரயில்

கோப்புப்படம்

Updated On :29 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் மற்றும் வந்து சேரும் உழவன், அனந்தபுரி, சேது உள்பட 4 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 4-ஆம் தேதி வரை தஞ்சாவூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் உழவன் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அனந்தபுரி அதிவிரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் சேது விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமாா்க்கமாக இந்த விரைவு ரயில்கள் டிச. 1 முதல் 5-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.