தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை தமிழக அரசு உடனடியாகக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் டிடிவி.தினகரன்.

Updated On :30 நவம்பர் 2025, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை தமிழக அரசு உடனடியாகக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழையின் தொடக்கக் காலத்தில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது டித்வா புயல் தாக்கத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல் வெளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரும், அதில் மூழ்கியிருக்கும் நெற்பயிா்களும் காவிரி டெல்டா விவசாயிகள் மீளவே முடியாத அளவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை தமிழக அரசு உடனடியாகக் கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், திங்கள்கிழமையுடன் (டிச.1) நிறைவடைய இருக்கும் பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.