டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. புதுச்சேரியில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால், புதுச்சேரி - காரைக்கால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, கொழும்பு - சென்னை இடையேயான 11 ஏர்லங்கா, 6 இன்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!
Summary
cyclone ditwah flights remain cancel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

கோவை - அபுதாபி விமான சேவை மாா்ச் 28 வரை ரத்து!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


