மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிட்வா புயல்: புதுச்சேரியில் இன்றும் விமான சேவை ரத்து

புதுச்சேரி - காரைக்கால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :30 நவம்பர் 2025, 3:05 am

டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. புதுச்சேரியில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால், புதுச்சேரி - காரைக்கால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, கொழும்பு - சென்னை இடையேயான 11 ஏர்லங்கா, 6 இன்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Summary

cyclone ditwah flights remain cancel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.