விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘மருத்துவர் பணியிடங்கள் இல்லை: பல்நோக்கு மருத்துவமனைகளை திறப்பதில் சிக்கல்’!

தமிழகத்தில் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்காததால் புதிதாகக் கட்டப்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதாக அரசு மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்காததால் புதிதாகக் கட்டப்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதாக அரசு மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, காமராஜ் நகரில் செயல்பட்டு வருகிறது. அதற்கான மருத்துவமனை நகர்ப்பகுதியில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், 1,200 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பும் இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் ரூ.136.35 கோடியில் காமராஜ் நகரில் 7 மாடிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 687 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

பல்நோக்கு மருத்துவமனையாக அமைக்கவே அதன் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது மகப்பேறு, குழந்தைகள் நலனுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையாக அதை மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல்நோக்கு மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், புதிதாக சுமார் 65 பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதனால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அதை தவிர்க்கவே இந்த மாற்றத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

ஏற்கெனவே வேலூரில் ரூ.198 கோடியில் பென்லேன்ட் பல்நோக்கு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, திறப்பு விழாவின் போது மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இதேபோல, சேலம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனையிலும் போதிய மருத்துவர் பணியிடம் உருவாக்கப்படாததால் தினந்தோறும் சேலம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இருந்து 8 மருத்துவர்கள் அங்கு மாற்றுப் பணிக்கு செல்கின்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையிலும் இதே நிலைதான். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 25 மருத்துவர்கள், 45 செவிலியர்கள் அந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காண்பதுடன் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி பல்நோக்கு மருத்துவமனைகளைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.