ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரூர் பலி: பாஜக கவுன்சிலரின் மனு விசாரணைக்கு ஏற்க மறுப்பு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் மனு ...

News image
சென்னை உயர்நீதிமன்றம்- கோப்புப்படம்
Updated On :3 அக்டோபர் 2025, 5:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பாஜக கவுன்சிலரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு மனுதாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

ஏற்கெனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Karur stampede: BJP councilor files petition seeking order for CBI probe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.