அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நெடுஞ்சாலைகளில் இனி எந்தக் கட்சி கூட்டத்துக்கும் அனுமதியில்லை: மதுரை கிளை

நெடுஞ்சாலைகளில் இனி எந்தக் கட்சி கூட்டத்துக்கும் அனுமதியில்லை என்று மதுரை கிளை உத்தரவு

News image

நீதிமன்றம் உத்தரவு

Updated On :3 அக்டோபர் 2025, 1:26 pm IST

மதுரை: தமிழகத்தில், இனி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தக் கட்சியும் கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு விதிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விதிகளை வகுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை வெளியிட்டு, அரசாணை பிறப்பிக்கும் வரை, அரசியல் கட்சிகளுக்கு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களை நடத்திக் கொள்ள தடையில்லை.

மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்திக் கொள்ள என்று ஆட்சியர்களால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படலாம். அவ்வாறு கூட்டம் நடத்தப்படும் இடங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

விசாரணை தொடங்கும் நிலையிலேயே, சிபிஐ விசாரணை கோர முடியாது என்றும், விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால்தான் சிபிஐ விசாரணை கோர முடியும் என்றும் கூறி நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்ந்து, கரூர் நெரிசல் சம்பவத்தில் அதிக இழப்பீடு கோரிய வழக்குகளில் தவெக மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.