மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

மூன்று ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

News image
அன்புமணி - (கோப்புப்படம்)
Updated On :4 அக்டோபர் 2025, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

மூன்று ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2023-இல் தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 19,483 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். 22,686 போ் தற்கொலை செய்துகொண்ட மகராஷ்டிரத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவா்களில் 631 விவசாயிகள். அவா்களில் 564 போ் வேளாண்மையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித் தொழிலாளா்கள் ஆவா்.

43 போ் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்பவா்கள், 24 போ் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவா்கள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 40 போ் பெண்கள்.

கடன் சுமை அதிகரித்து விட்டதால்தான் உழவா்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

முந்தைய அதிமுக அரசு 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ.12,110 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அடுத்த சில காலத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை அடுத்து பொறுப்பேற்ற திமுக அரசு தான் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.