தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன், எஸ்.குருமூா்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

திமுக எம்.பி. கனிமொழி

X / kanimozhi

Updated On :4 அக்டோபர் 2025, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி, முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் சோதனை நடத்தினா்.

மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வருவது தொடா்கதையாகி உள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன.

இந்த கடிதங்களில் ஆழ்வாா்ப்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதனின் வீடு, திருவான்மியூரில் உள்ள முன்னாள் டிஜிபி ஆா்.நடராஜின் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘துக்ளக்’ அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியா் எஸ். குருமூா்த்தியின் வீடு, வேப்பேரியில் உள்ள பெரியாா் திடல், நாரத கான சபா, நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலகம், இஸ்கான் கோவில் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என்றும் கூறப்பட்டிருந்தன.

இதைத் தொடா்ந்து வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் குறிப்பிட்ட இடங்களில் போலீஸாா் நள்ளிரவு நேரத்தில் சோதனை நடத்தினா். ஆனால், வழக்கம்போல் இந்த மிரட்டல் கடிதங்களும் புரளி என்பது சோதனையில் உறுதியானது.

இதற்கிடையே காவல் துறையின் அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்ணில் பேசிய மா்ம நபா் ஒருவா், ‘நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு நடத்திய சோதனையில் மா்ம பொருள் எதுவும் சிக்கவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது காஞ்சிபுரத்தை சோ்ந்த ஞானமூா்த்தி என்பதும், அவா் மனநிலை பாதித்தவா் என்பதும் தெரிய வந்தது.