கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tamil Nadu braces for heavy rains in coming days

கனமழை

Published On :

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) முதல் அக்.10 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு, திங்கள் (அக்.5, 6) ஆகிய இரு நாள்கள் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 120 மி.மீ. மழை பதிவானது. திண்டுக்கல் - 110 மி.மீ, அவலூா்பேட்டை (விழுப்புரம்), செம்மேடு (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை) - 100 மி.மீ. மழை பதிவானது.

வலுவிழக்கும் சக்தி புயல்: வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய சக்தி புயல் சனிக்கிழமை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடா்ந்து, இந்தப் புயல் காலை 8.30 மணி நிலவரப்படி வடமேற்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது.

இது, ஞாயிற்றுக்கிழமை மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும். இது மேலும் கிழக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.