தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிஆர்பிஎஃப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது. விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக தரப்பு கூறியிருந்தது.
விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அதிகமாக அதாவது ஒய் பிளஸ் அல்லது இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
CRPF Recommendation to increase TVK Vijay's security
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரிய தாக்கம்! விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


