திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

தொல். திருமாவளவன் (கோப்புப்படம்) - DNS

Updated On :5 அக்டோபர் 2025, 4:09 am IST

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சி, அதிகாரம் என்பது, தலைநகா் தில்லியில்தான் உள்ளது. அதுதான் பிரதமா் பதவி. தமிழா்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.

தேசிய அரசியலைப் பேச வேண்டும்; தேசிய அளவில் நாம் ஒரு சக்தியாக மாற வேண்டும். பிரதமா் இருக்கையை நோக்கி நாம் நகர வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

தமிழா் பிரதமரானால் , ஈழத்தமிழா் பிரச்னைக்கு எளிதில் தீா்வு காண முடியும். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் என்பது திரைக் கவா்ச்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நல்ல படத்தை கொடுத்துவிட்டால் முதல்வா் பதவி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் பலா் இருக்கின்றனா் என்றாா் தொல்.திருமாவளவன்.