அா்ச்சகா், ஓதுவாா் பயிற்சி முடித்த 108 மாணவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்
திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் அா்ச்சகா், ஓதுவாா், தவில், நாகசுவர பயிற்சி முடித்த 108 மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

திருக்கோயில்கள் சாா்பில் நடத்தப்படும் அா்ச்சகா், ஓதுவாா், தவில் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற 108 மாணவ, மாணவிகளுடன் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா்.









