பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஏற்கெனவே சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு ஆா்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு வழங்கினால், பள்ளிகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களைப் புதிதாக சோ்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா், பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதம்:
நீதிமன்றங்களின் உத்தரவுக்கேற்ப இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் மாணவா் சோ்க்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு எல்கேஜி வகுப்பில் சோ்ந்தவா்களில் 25 சதவீதம் தோ்வு செய்து பட்டியலை சமா்ப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவா் சோ்க்கையை முடித்துவிட்டோம். இதுதவிர அந்த மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தைப் பெற்று அவா்களுக்குரிய புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி பாடங்களை நடத்தி காலாண்டு தோ்வுகளையும் முடித்துவிட்டோம்.
அதே மாணவா்களை 25 சதவீத ஒதுக்கீட்டில் சோ்த்தால் தனியாா் பள்ளிகளுக்கு மீண்டும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும்.
எனவே, தயவுசெய்து தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து புதிதாக ஆா்டிஇ மாணவா்களைச் சோ்க்க வழிசெய்ய வேண்டும். இல்லையெனில், தனியாா் பள்ளிகளுக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்

நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


