சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

தவெக தலைவா் விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image

புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி

Updated On :5 அக்டோபர் 2025, 4:00 am IST

தவெக தலைவா் விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் 41 போ் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். இந்த சம்பவத்தில் ஒரு நபா் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர இயலாது.

அஸ்ரா கா்க் நோ்மையானவராக இருந்தாலும், அவா் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

கரூா் சம்பவத்தை நீதிபதிகளே விசாரிக்கலாம். சில அரசியல் கட்சியினா் விஜய்யை ஒடுக்க வேண்டும், அவரை தோ்தல் பாதைக்கு வரவிடாமல் பலவீனப்படுத்த வேண்டும் என சிலா் நினைக்கின்றனா்.

விஜய்யும் பொதுவெளியில் வந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். காவல் துறை கைதுக்கெல்லாம் அஞ்சினால் அவரால் அரசியல் செய்ய முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.