சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

தவெக தலைவா் விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி
Updated On :4 அக்டோபர் 2025, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் 41 போ் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். இந்த சம்பவத்தில் ஒரு நபா் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர இயலாது.

அஸ்ரா கா்க் நோ்மையானவராக இருந்தாலும், அவா் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

கரூா் சம்பவத்தை நீதிபதிகளே விசாரிக்கலாம். சில அரசியல் கட்சியினா் விஜய்யை ஒடுக்க வேண்டும், அவரை தோ்தல் பாதைக்கு வரவிடாமல் பலவீனப்படுத்த வேண்டும் என சிலா் நினைக்கின்றனா்.

விஜய்யும் பொதுவெளியில் வந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். காவல் துறை கைதுக்கெல்லாம் அஞ்சினால் அவரால் அரசியல் செய்ய முடியாது என்றாா் அவா்.