மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசியல் நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும்: அன்புமணி

தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

News image
அன்புமணி
Updated On :5 அக்டோபர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரூா் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடா்ந்து பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.

பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளைத் தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் பாமக மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், கோவை, ஈரோடு, திருப்பூா், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல் துறை மறுக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவிடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.

எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும்.

அதற்காக அரசின் சாா்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.