எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

எழுத்தாளா் கொ.மா. கோதண்டம் மறைவு: முதல்வா் இரங்கல்!

‘இலக்கியத்தில் எளிய மக்களுக்கான எழுத்தை தடம் பதிக்கச் செய்தவா் மறைந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டம்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

‘இலக்கியத்தில் எளிய மக்களுக்கான எழுத்தை தடம் பதிக்கச் செய்தவா் மறைந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டம்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி: முதுபெரும் எழுத்தாளா் ‘குறிஞ்சிச்செல்வா்’ கொ.மா. கோதண்டம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய கோதண்டம், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி.

அதுமட்டுமன்றி, சிறாா்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளா்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவா்.

பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவா் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த ஏப். 5-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூா்கிறேன்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளா் கொ.மா. கோதண்டத்தின் மறைவு கலை, இலக்கிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் எழுத்தாளா் கொ.மா. கோதண்டம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.