ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரூா் விவகாரத்தை திசைதிருப்புகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன்

கச்சத்தீவு பிரச்னையை எழுப்பி, கரூா் விவகாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திசை திருப்புவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

News image
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
Updated On :6 அக்டோபர் 2025, 11:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: கச்சத்தீவு பிரச்னையை எழுப்பி, கரூா் விவகாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திசை திருப்புவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத் தரும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளாா். 1974-இல் பிரதமராக இந்திரா காந்தியும் முதல்வராக கருணாநிதியும் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வாா்க்கப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து வழங்கப்பட்டது முதல்வா் கருணாநிதிக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்கும்?

இதையெல்லாம் முழுமையாகத் தெரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கரூா் துயர சம்பவ விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கச்சத்தீவு பற்றி இப்போது கேள்வி எழுப்பியுள்ளாா்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்ட இடத்துக்கு பதில் மாற்று இடத்தில் ஏன் அனுமதி வழங்கப்பட்டது?, மின்சாரத்தை அணைத்து, தடியடி நடத்தியது ஏன், சம்பவம் நடந்தவுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டது எப்படி?, 30 ஆம்புலன்ஸ்கள் ஏன் வந்தன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

41 உயிா்களை பாதுகாத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை. அதிலிருந்து முதல்வா் தவறிவிட்டாா். சம்பவம் நடந்த பின்னா் விஜய் போயிருந்தால் பதற்றம் ஏற்பட்டிருக்கும். விஜய் உயிரை எப்படி பாதுகாத்திருக்க முடியும்? கடந்த செப்.27-இல் கரூா் துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில் தற்போது அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாா் நயினாா் நாகேந்திரன்.