மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ குப்பன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணலியில் அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் எண்ணை சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதிதாக ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் பராமரிப்புப் பணிகளும் பகுதி பகுதியாக ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இங்கு வட மாநில தொழிலாளர்கள் 3,000 பேருக்கு மேல் தின கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். தினக்கூலி பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுண்டு.
தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் தலைமையில் தொழிற்சாலை முன்பு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் உள்பட 50 பேரை கைது செய்து மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
Summary
50 people, including former MLA Kuppan, were arrested for protesting at the Manali CPCL plant demanding jobs for locals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










